Saturday, 21 July 2018

அடி என்னவளே

அடி என்னவளே ! உன் கருவிழி மேகங்கள் கண்ணுக்குள் மோதிக்கொண்டு கருங்குளத்து நீர் கன்னங்களில் வழியும் பொது - என் இதயக் குளத்தின் செந்நீர் சிதறி சாலையில் ஓடுதடி- என்னை சோகத்தில் வாட்டுதடி. வழிகின்ற நீர் - உன் வாய்க் கமலத்தில் வடிந்து விட்டால் - நீ மகிழ்ச்சியால் சற்று சிரித்து விட்டால் - என் இதயத்தின் நீரெல்லாம் ஓட மறுத்து ஒரு நிமிடம் உறைந்து உன் அழகை ரசிக்குதடி உன்னை முத்தமிட துடிக்குதடி கண்கள் தான் காதலின் பிறப்பிடம் கவிஞர்கள் சொல்கிறார்கள் - உன் கண்ணீரல்லவா என் உயிரின் இருப்பிடம் நான் சொல்கிறேன். சிந்தி விடாதே - என் செல்லமே ! கண்ணீரை மட்டுமல்ல - என் காதலையும் தான்.

No comments:

Post a Comment